×

ஈரோடு அருகே சோகம்: சாலை விபத்தில் கல்லூரி மாணவி பலி

ஈரோடு: ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் கல்விச் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் ஸ்வேதா என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பேருந்து புறப்பட்டு 500 மீட்டர் தூரம் மட்டுமே சென்ற நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

The post ஈரோடு அருகே சோகம்: சாலை விபத்தில் கல்லூரி மாணவி பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Veppampalayam ,Shweta ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது